வியாபார நிலையங்களில் டயர் தட்டுப்பாடு காணப்படுவதனால் அந்தந்த வாகனங்களுக்குப் பொருத்தமான டயர்கள் வியாபார நிலையங்களில் இல்லை என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் உட்பட போக்குவரத்து துறையில் ஈடுபட்டுள்ள பலர் தெரிவித்துள்ளனர்.
தேவையான டயர்கள் வியாபார நிலையங்களுக்கு வந்தடைந்ததன் பின்னர் இந்த சட்டத்தை நடைமுறைப் படுத்துமாறு அகில இலங்கை சாரதி பயிற்சிப் பாடசாலை உரிமையாளர்களின் தேசிய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பயணிகள் போக்குவரத்து துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட சாரதிகளின் கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு இந்த டயர்களை மாற்றுவதற்கு நிவாரண காலத்தை வழங்க தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
No comments: