News Just In

3/15/2021 07:08:00 PM

இன்று திறக்கப்பட்ட பாடசாலைகள் அனைத்திற்கும் மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது!!


நாட்டிலுள்ள அரச பாடசாலைகள் க.பொ.த.சா/த பரீட்சை விடுமுறையின் பின்னர் மீண்டும் இன்று திங்கட்கிழமை(15) ஆரம்பமாகவிருக்கின்றன. நீண்டகாலத்திற்குப்பின்பு மேல் மாகாண பாடசாலைகளில் தரம் 05, 11மற்றும் 13ஆம் தர வகுப்புகளும் இன்று ஆரம்பமாகிறது.

அதேவேளை மேல் மாகாண பாடசாலைகளில் தரம் 05,11,13ஆம் தரங்களை தவிர்ந்த ஏனைய தர வகுப்பு கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன.

இதற்கமைவாக தரம் 1 தொடக்கம் தரம் 4 வரையிலும் தரம் 06தொடக்கம் 10மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்தார்.

இன்று திறக்கப்படும் பாடசாலைகள் யாவும் சித்திரைப்புத்தாண்டு விடுமுறைக்காக ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி மூடப்படவிருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி பெரேரா அறிவித்துள்ளார்.

No comments: