News Just In

3/16/2021 08:29:00 PM

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது!!


சட்டமா அதிபரின் ஆலோசணைக்கு அமைவாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளளார்.

பயங்கரவாதத் தடை சட்டம் மற்றும் குற்றவியல் சட்டங்களின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அசாத் சாலி கடந்த 10 ஆம் திகதி நாட்டின் சட்டம் தொடர்பாக ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனை சட்டக் கோவை, பயங்கரவாத தடைச் சட்டம், அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சட்டங்களின் கீழ் அவர் குற்றமிழைத்துள்ளதாக சட்டமா அதிபர், குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு அறிவுறுத்தியிருந்தார்.

No comments: