News Just In

3/21/2021 12:51:00 PM

முல்லைத்தீவு மாவட்டத்தில் வங்கிகளின் சேவை வருகின்ற செவ்வாய்கிழமை முதல் ஆரம்பம்!!


முல்லைத்தீவு மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் வங்கிகளின் சேவை : வங்கிகளுடனான நேரடி சந்திப்பு நிகழ்ச்சித் திட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(23) கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் காலை 9.30மணிக்கு ஆரம்பமாகி பி.ப 4.00மணிவரை இடம்பெறவுள்ளது.
இதனூடாக:

*வங்கி கணக்கு ஒன்றை ஆரம்பித்தல்.
*உங்களிடம் வங்கி கணக்கு இல்லாவிடின் உங்கள் தொழில் முயற்சிக்கு உரிய வங்கி கணக்கை ஆரம்பிக்க வழிகாட்டுதல்கள்.
*குறைந்த வட்டி வீத கடன்கள்.
*பொருத்தமான குறைந்த வட்டி.
*வங்கி கடனை பெற வழிகாட்டுதல்கள் மற்றும் வாய்ப்புகள்.
*CRIB(கீரிப்) மற்றும் பிணையாளர் பிரச்சினைகள் மேற்படி பிரச்சினைகளுக்கு தீர்வு.
*குழு கடன் பெற வழிகாட்டுதல்கள்.

இச் செயற்றிட்டத்தில் தொழில் முயற்சியாளர்கள் அனைவரும் பங்கு பற்றி பயன்பெறுமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments: