தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலமிடியாவ பகுதியில் சிறுவனொருவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் மேல் ஏறி , அதன் எரிப்பொருள் நிரப்பு தாங்கியில் நிரப்பப்பட்டிருந்த எரிப்பொருளின் வாசனையை நுகர்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவ தினத்தன்று தனது பாட்டியின் வீட்டுக்கு சென்றுள்ள சிறுவன் , வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் மீது ஏறி , அதன் எரிபொருள் தாங்கியில் நிரப்பப்பட்டிருந்த எரிப்பொருளின் வாசனையை நுகர்ந்து மயக்கமுற்றுள்ளார்.
பின்னர் , சிறுவன் உடனே கலேவெல வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் , அதன்போதும் சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் நிர்வாகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வெலமிடியாவ பகுதியைச் சேர்ந்த 7 வயதுடைய சஜித் குமார முணசிங்க எனப்படும் , இரண்டாம் தரத்தில் கல்வி கற்றுவந்த சிறுவனொருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சடலம் தொடர்பான பிரதே பரிசோதனைகளின் பின்னர் அதனை உறவினர்களிடம் ஒப்படைக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த தம்புள்ளை பொலிஸார், அது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments: