இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (21) மேலும் 293 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 86,759 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 545 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments: