இதன்படி 10 அத்தியாவசிய பொருட்களை ஆயிரம் ரூபா சலுகை விலையில் கொள்வனவு செய்யும் விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
அரிசி கோதுமை மா சீனி பருப்பு உள்ளிட்ட மேலும் சில அத்தியாவசிய பொருட்கள் நுகர்வோருக்கு சலுகைவிலையில் வழங்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சதொச நிறுவனத்தின் ஊடாக 27 அத்தியாவசிய பொருட்கள் சலுகை விலையில் நுகர்வோருக்கு வழங்கப்பட்டுவருவதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
No comments: