News Just In

3/15/2021 08:38:00 PM

கொரோனா தொற்றால் மேலும் 05 பேர் உயிரிழப்பு- மொத்த எண்ணிக்கை 532ஆக அதிகரிப்பு!!


இலங்கையில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

61, 76, 78, 86 மற்றும் 94 வயதுடையவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 88 ஆயிரத்து 85 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தொற்றில் இருந்து இதுவரை 84 ஆயிரத்து 969 பேர் குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

No comments: