News Just In

11/23/2020 02:56:00 PM

சற்று முன்னர் கொரோனா தொற்றுக்குள்ளான சிறைக்கைதி உயிரிழப்பு!!


கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சைப்பெற்று வந்த சிறைக்கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மஹர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த நபர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

82 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

No comments: