News Just In

10/29/2020 07:52:00 AM

யாழில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று- மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!


யாழ்ப்பாணத்தில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின், பருத்தித்துறையை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த இருவருக்கும், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்குமே நேற்றையதினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று வந்து, தப்போது தனிமைப்படுத்தலில் இருக்கும் யாழ் மாவட்டத்தை சேர்ந்த மூவருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 243 பேருக்கான Covid-19 தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த நபர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதுடன், ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை விடத்தல்பளை தனிமைப்படுத்தல் முகாமில் தமிமைப்படுத்தப்பட்டுள்ள தென்பகுதியைச் சேர்ந்த 37 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: