-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பு சிறைச்சாலை சிறைக்கைதிகளின் நலன்புரிச் சங்க வருடாந்தப் பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும் ஞாயிற்றுக்கிழமை (01.03.2020) இரவு இடம்பெற்றது.
இந்நிகழ்வின்போது சிறைச்சாலை அத்தியட்சகர் சுஜீர விஜேசேகர உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், சிறைக்கைதிகளின் நலன்புரி சங்க உறுப்பினர்கள் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
மட்டக்களப்பு ஓய்வு விடுதியில் நலன்புரிச் சங்கத் தலைவர் என்.வி. ரஞ்சன் தலைமையில் இடம்பெற்ற நிருவாகத் தெரிவின்போது சங்கத்தின் புதிய தலைவராக ராஜன் மயில்வாகனம் தெரிவு செய்யப்பட்டார்.
பொதுக் கூட்டத்தின்போது நலன்புரி சங்கத்தினால் கடந்த ஆண்டு; முன்னெடுக்கப்பட்ட செயல்பாடுகள், 2020ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
சிறைக்கைதிகளின் நலன்புரி சங்கம் கைதிகளின் நலன்களை பேணுவது, கைதிகளுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வினை அணுகுவது, கைதிகளின் குடும்பப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெறுவதற்கு அனுசரணை வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
மட்டக்களப்பு சிறைக் கைதிகள் நலன்புரிச் சங்கம் 1975ஆம் ஆண்டு முதல் சிறைக் கைதிகளின் நலனில் அக்கறை கொண்டு செயற்பட்டு வருவதாக அதன் நிருவாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
3/02/2020 01:55:00 PM
Home
/
உள்ளூர்
/
மட்டக்களப்பு
/
மட்டக்களப்பு சிறைச்சாலையின் சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்க வருடாந்த பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும்
மட்டக்களப்பு சிறைச்சாலையின் சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்க வருடாந்த பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: