News Just In

2/26/2020 01:18:00 PM

மட்டக்களப்பில் தனியார் வங்கி முகாமையாளர்கள் செய்த செயல்!-பொலிஸாரினால் பிடிக்கப்பட்டனர் !


மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்ற 4 பேருக்கு 1 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாவை தண்டப் பணமாக செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. றிஸ்வான் உத்தரவிட்டார்.

களியாட்டத்திற்கு தனியார் வங்கி முகாமையாளர்கள் வாகனம் ஒன்றில் சென்று நள்ளிரவு 1 மணியளவில் மட்டக்களப்பை சென்று தமது வங்கியில் நிறுத்தி வைத்துவிட்டு சென்ற மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீடுகளுக்கு வேவ்வேறு பாதையில் திரும்பும் போது போக்குவரத்து பொலிசாரின் வீதி சோதனையின் போது மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்றுள்ளதை கண்டுபிடித்தனர்

அவ்வாறு இரு வங்கி முகாமையாளர்கள் உட்பட 4 பேரை அன்றைய தினம் பொலிசார் மட்டக்களப்பு நகர் பகுதியில் கைது செய்தனர். இவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது வங்கி முகாமையாளர் ஒருவருக்கு 30 ஆயிரம் ரூபாவும் மற்றவருக்கு 55 ஆயிரம் ரூபாவும் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் மதுபோதையில் மோட்டர் சைக்கிள் செலுத்திய ஒருவருக்கு 55 ஆயிரம் ரூபாவும், வேறு ஒருவருக்கு 55 ஆயிரம் ரூபாவை செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: