News Just In

2/26/2020 08:33:00 PM

அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பி! வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதால் ஏற்பட்ட விபரீதம்!!

இரு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைலப்பாக மாறியதால் ஆத்திரமடைந்த தம்பி, தனது மூத்த சகோதரனின் கழுத்தை வெட்டியதில் படுகாயமடைந்து மூத்த சகோதரன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் 48 வயதான இரு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (25) இரவு, இரத்தினபுரி வேவல்வத்தை பொலிஸ் பிரிவின் அப்புகஸ்தென்ன, கீழ் அமுனுதென்ன தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரைக் கைது செய்த வேவல்வத்தை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

No comments: