News Just In

2/17/2020 10:48:00 AM

கத்தாரில் பணியாற்றி நாடு திரும்பியவர் மீது துப்பாக்கிப் பிரயோகம்!

இன்று (17) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே பலபிட்டிய, வெலிவத்துகொட பகுதியில் குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிப் பிரயோகத்துக்கு உள்ளான நபர் கத்தாரில் சாரதியாக பணியாற்றிய நிலையில் கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் திகதி இலங்கை வந்திருந்த நிலையில் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிப் பிரயோகத்துக்கு உள்ளான நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: