News Just In

2/20/2020 10:40:00 PM

கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வு

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர் ஒன்றியம் நடாத்தும், "கலையாழி" கலை இலக்கியத் திருவிழா 19.02.2020, 20.02.2020 ஆகிய இரு தினங்களில் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்றது.

இதன் இறுதி நிகழ்வாக மாணவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் வைபவம் இன்று மாலை இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முதுநிலை பேராசிரியர் மௌனகுரு, சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் திருமதி அம்மன்கிளி முருகதாஸ், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெய்சங்கர் மற்றும் விரிவுரையாளர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

மாணவர்களின் கலை அம்சம் நிறைந்த அரங்க ஆற்றுகைகளில் பாடல்கள், கவிதை, நடனம் போன்றன இடம்பெற்றதுடன், தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.




























No comments: