News Just In

2/17/2020 07:28:00 AM

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் 10 ஆயிரம் வீடமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்!

இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் தனி வீடமைப்பு வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு 16.02.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஹட்டன் வெலிஓயா தோட்டம் மேற்பிரிவில் இடம்பெற்றது. இதன்போது 50 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் விநோத் கே.ஜேக்கப் கலந்து கொண்டார். அத்தோடு இலங்கைக்கான இந்திய உதவி தூதுவர் திரேந்திர சிங் உள்ளிட்ட பெருந்தோட்டத்துறை மற்றும் ஏற்றுமதி பயிர் செய்கை அமைச்சர் ரமேஷ் பத்திரண, ஆகியோருடன் 

முன்னாள் மத்திய மாகாண சபை அமைச்சர் எம்.ரமேஷ்வரன், உறுப்பினர்களான கணபதி கனகராஜ், பி.சக்திவேல், ஏ.பிலிப்குமார் அடங்களாக மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பரத் அருள்சாமி, அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர். கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

இவ் தனி வீடுகளில் இரண்டு அறைகள், சமையலறை, வரவேற்பறையுடன் இந்த வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

அத்துடன் வீட்டிற்கான மின்னிணைப்பு மற்றும் குடிநீர் வசதிகள், வீதி மற்றும் வடிகாலமைப்பு போன்றன சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் உதவியுடன் மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.

No comments: