News Just In

11/06/2019 10:29:00 PM

எஸ்.பி. திசநாயக்காவின் மெய்ப்பாதுகாவலர்கள் துப்பாக்கி பிரயோகம் - இருவர் படுகாயம்

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திசநாயக்கவின் மெய்ப்பாதுகாவலர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க பயணித்த வாகனத்தைத் தடுத்த நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட  குழு ஒன்றின் மீது எஸ்.பி.திசநாயக்கவின் பாதுகாப்புப் படையினரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த இருவர் தெலிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கினிகத்தேன போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: