News Just In

11/13/2019 07:56:00 AM

இலங்கை மகளிர் கால்பந்தாட்ட அணியில் வடக்கு மற்றும் மலையகத்தை சேர்ந்த வீராங்கணைகள்

டிசம்பர் மாதம் நேபா­ளத்தில் நடை­பெ­ற­வுள்ள 13ஆவது தெற்­கா­சிய விளையாட்டு விழாவின் மகளிர் கால்­பந்­தாட்டப் போட்­டியில் இலங்கை அணியில் வட மாகா­ணத்தைச் சேர்ந்த பாஸ்­கரன் ஷானு, மலை­ய­கத்தின் செல்­வராஜ் யுவ­ராணி ஆகியோர் இடம்­பெ­ற்றுள்ளனர்.

2013, 2014 ஆகிய ஆண்டுகளில் 14 வய­துக்­குட்­பட்ட இலங்கை அணியில் இடம்பி­டித்த பாஸ்­கரன் ஷானு வட மாகா­ணத்­தி­லி­ருந்து இலங்கை கனிஷ்ட அணிக்கு தெரி­வான முத­லா­வது வீராங்கணை என்ற பெரு­மையைப் பெற்றார். 5 வரு­டங்கள் கழித்து நடத்­தப்­பட்ட தேர்வின் மூலம் தேசிய அணியில் ஷானு இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ளார். 

பதுளை மாவட்டம், ஹாலி – எல தமிழ் வித்­தி­யா­ல­யத்தின் முன்னாள் வீராங்கணை­யான செல்­வராஜ் யுவ­ராணி கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக தேசிய அணியில் விளையாடி வருகின்றார்.

தெற்­கா­சிய மகளிர் கால்­பந்­தாட்டப் போட்­டிக்கு தெரி­வா­கி­யுள்ள 20 வீராங்கணைகள் இந்­தோ­னே­சி­யாவில் நடை­பெ­ற­வுள்ள பயிற்சிப் போட்டிகளில் விளை­யா­டு­வ­தற்­காக புறப்­பட்டுச் சென்றுள்ளனர்.

No comments: