
திமுக வர்த்தக அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம்வெளியிட்ட அறிக்கை: கன்னட பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கலாமா என்று கேட்டால், திருநாவுக்கரசரை மத்திய பிரதேசத்தில் இருந்து எம்பி ஆக்கவில்லையா என்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்.
நாடாளுமன்ற உறுப்பினராக இந்தியர் ஒருவர் இந்தியாவில் எங்கும் நிற்கலாம். சட்டப்பேரவைவைக்கு அந்த மாநிலத்துக்குள் வாக்காளராக இருக்க வேண்டும் என்பதும், கவுன்சிலருக்கு அந்த வார்டிலேயே வாக்காளராக இருக்க வேண்டும் என்பதும் கூடவா செங்கோட்டையனுக்கு தெரியாது.
டெல்லியில் தானே வேலை செய்வார் என்கிறார் அமைச்சர் நிர்மல்குமார். டெல்லியில் உள்ளவர்களுக்காக வேலை செய்யப் போகிறாரா? தமிழர்களுக்காகத் தானே பேசப்போகிறார்.
அப்படியென்றால், கோட்டையில் அறையும், தேசியக் கொடியும், காரும் அவருக்கு இல்லையா? இது சின்ன பதவி பெரிதுபடுத்த வேண்டாம் என்கிறார் அமைச்சர்.
இது சின்ன பதவி என்றால், அமைச்சர் அந்தஸ்து எதற்கு? அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களில் ஒருவரையோ, புதிய படித்த தமிழரையோ நியமிக்கலாம். வெங்கட நாராயணனை நீக்கலாம் என தெரிவித்துள்ளார்.
No comments: