News Just In

6/11/2026 04:36:00 PM

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம்: தமிழக முதல்வர் விஜய் பங்குபற்றினார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம்: தமிழக முதல்வர் விஜய் பங்குபற்றினார்




புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் பங்குபற்றினார்.

புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் நடைபெற்ற 11 வது நிதி ஆயோக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ராஜநாத் சிங், ஜெ. பி. நட்டா, நிதின் கட்கரி , சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் ,

தமிழக முதல்வர் விஜய், தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ், ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடகா மாநில முதல்வர் டி கே சிவக்குமார் உள்ளிட்ட பல மாலங்களின் முதல்வர்களும், நிதி ஆயோக் அமைப்பின் முக்கிய மற்றும் முன்னணி உயர் அதிகாரிகளும் பங்கு பற்றினர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலங்களின் நிதி தேவைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.கூட்டம் நிறைவடைந்ததும் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.‌

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்தில் தமிழக முதல்வர் விஜய் பங்கு பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் புது தில்லியில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ,துணை குடியரசு தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.‌










No comments: