News Just In

6/20/2026 06:54:00 AM

கோட்டாபயவின் இரகசிய பிரிவில் 134 பேர்!

 கோட்டாபயவின் இரகசிய பிரிவில் 134 பேர்


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போது கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு தற்போதுவரை தொடர் விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

அந்தவகையில் சுரேஷ் சலே பற்றி நாளுக்கு நாள் ஏராளமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டியது அவசியம். எனவே, விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதே சலே செய்ய வேண்டிய கடமையாகும் என அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது இவ்வாறிருக்க கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிய பின்னர், 2022 ஜூலை முதல் 2024 பெப்ரவரி 21 வரை அவர் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக 19 இலட்சத்திற்கும் அதிமான தொகையைப் பெற்றுக் கொண்டமைக்காக கைது செய்யப்பட்டார்.

இதேவேளை கோட்டாபயவின் இரகசிய பிரிவில் 134 பேர் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

No comments: