
விஜய் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற நிகழ்வில் ராகுல் காந்தி கலந்துகொண்ட சில பதிவுகள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முடக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
விஜய் தமிழகத்தின் முதல்வராக (10) அன்று பதவியேற்றுக்கொண்டார்.
விஜய் பதவியேற்பு விழாவுக்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் வருகை தந்திருந்தார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் விஜய்க்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணத்தையும் ஆளுநர் அர்லேகர் செய்து வைத்தார்.
இந்த விழா நிகழ்ச்சியில் ஆளுநர் புறப்பட்டு சென்ற பிறகு முதல்வர் விஜய் ராகுலுடன் இணைந்து செல்பி காணொளி எடுத்தார். அதேபோல, பதவியேற்புக்கு முன்பாக நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ராகுல் காந்தியை ஜோசப் விஜய் சந்தித்து உரையாடினார்.
ராகுலுக்கு கை குலுக்கி சால்வை அணிவித்த விஜய் சிறிது நேரம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது மேடையில் விஜய்யுடன் பேசியது தொடர்பான காணொளிகளை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவேற்றி இருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த பதிவு இணையத்தில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.
இந்த நிலையில் ராகுல் காந்தியின் இந்த பதிவுகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முடக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சசிவத்சா இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ராகுல் காந்தி, 'தளபதி' விஜய் ரீல் 12 மில்லியன் பார்வைகளை ஈர்த்தது.

ஒரு மணி நேரத்திற்குள் இது நடந்தது. புகைப்படப் பதிவு 46 மில்லியன் மக்களை அடைந்தது. ஆனால், ரீல்ல்ஸ் காணொளியை இன்ஸ்டாகிராம் முடக்கியுள்ளது.
மத்திய மின் மற்றும் தகவல் தொழில் நுடபத்துறை (MEity) விதிகளால் இந்த முடக்கம் ஏற்பட்டு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.ஆனால், அரசு வட்டாரங்கள் குற்றச்சாட்டுகளை மறுத்தன.மோடிக்கு இதில் தொடர்பில்லை என்று தெரிவித்தன. மேலும், இன்ஸ்டாகிராமின் உள் அமைப்பு தவறுதலாக முடக்கியது.
முடக்கப்பட்ட பதிவு பின்னர் மீட்டெடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
இன்ஸ்டகிராம் அந்த பதிவை முடக்கியது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டையும் ராகுல் காந்தி தனது இன்ஸ்டாவில் ஸ்டோரீஸ் ஆக பதிவிட்டு இருக்கிறார்.
No comments: