News Just In

4/27/2026 08:13:00 AM

வாக்கு எண்ணிக்கையின்போது மிகுந்த எச்சரிக்கை அவசியம்: தவெக வேட்பாளர்களுக்கு தலைமை உத்தரவு


வாக்கு எண்ணிக்கையின்போது மிகுந்த எச்சரிக்கை அவசியம்: தவெக வேட்பாளர்களுக்கு தலைமை உத்தரவு



தமிழகச் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு​கள் வெளி​யா​வதற்கு இன்​னும் சில தினங்​களே உள்ள நிலை​யில், தவெக தலைமை, தனது வேட்​பாளர்​களுக்கு முக்​கிய அறி​வுறுத்​தல்​களை வழங்​கி​யுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யிருக்​கிறது.

தமிழகத்​தில் கடந்த ஏப்​ரல் 23-ம் தேதி நடை​பெற்று முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான முடிவு​கள், வரும் மே 4-ம் தேதி வெளி​யாக​உள்​ளன. ஆட்​சிக் கட்​டிலில் அமரப்​போவது யார் என்​ப​தில் ஆளுங்​கட்​சி​யான திமுக, பிர​தான எதிர்க்​கட்​சி​யான அதி​முக மற்​றும் முதல் தேர்​தலைச் சந்​தித்​துள்ள தவெக ஆகிய மூன்று கட்​சிகளுமே அதீத நம்​பிக்​கை​யில் உள்​ளன.

குறிப்​பாக, முதல் தேர்​தலிலேயே ஆட்சி அமைக்​கத் தேவை​யான இடங்​களைப் பிடித்து விடு​வோம் என்​கிற நம்​பிக்​கை​யில் தவெக-​வினர் உற்​சாகத்​தில் இருக்​கிறார்​கள்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்​களாக பனையூரில் உள்ள கட்​சித் தலைமை அலு​வல​கத்​தில் தீவிர ஆலோ​சனைக் கூட்​டங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

வாக்கு எண்​ணிக்கை நாளன்று வேட்​பாளர்​கள் கடைபிடிக்க வேண்​டிய பாது​காப்பு நெறி​முறை​கள் மற்​றும் தேர்​தல் முடிவு​களுக்​குப் பிந்​தைய அடுத்​தகட்ட நகர்​வு​கள் குறித்து இந்​தத் தொடர் கூட்​டங்​களில் விவா​திக்​கப்​பட்டு வரு​கிறது.

அதாவது தேர்​தலுக்​குப் பிந்​தைய கள நில​வரங்​கள் குறித்து தவெக கட்​சித் தலைமை நடத்​திய விரி​வான ஆய்​வில், அக்​கட்சி பல தொகு​தி​களில் வெற்றி பெறு​வதற்​கான வாய்ப்​பு​கள் பிர​காச​மாக இருப்​பது தெரிய​வந்​துள்​ளது.

இதனைத் தொடர்ந்து பனையூரில் புஸ்ஸி ஆனந்த், செங்​கோட்​டையன் ஆலோ​சனைக் கூட்​டத்தை நடத்​தி​யுள்​ளனர். இந்​தக் கூட்​டத்​தில்​,50,000-க்​கும் அதி​க​மான வாக்​கு​களைப் பெற வாய்ப்​புள்​ள​தாகக் கருதப்​படும் 40-க்​கும் மேற்​பட்ட முக்​கிய வேட்​பாளர்​கள் நேரில் அழைக்​கப்​பட்​டிருந்​தனர்.
அவர்​களிடத்​தில் புஸ்ஸி ஆனந்த், செங்​கோட்​டையன் தேர்​தல் முடிவு நாளில் பின்​பற்ற வேண்​டிய வியூ​கங்​கள் குறித்து முக்​கிய அறி​வுறுத்​தல்​களை வழங்​கி​யிருக்​கிறார்​கள்.

ஆலோ​சனைக் கூட்​டத்​தில் புஸ்ஸி ஆனந்த், செங்​கோட்​டையன் பேசுகை​யில், “தேர்​தலுக்கு பிந்​தைய கள ஆய்​வு​கள் நமக்​குச் சாதக​மாக உள்​ளன.

மே 4-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெறும்​போது, வேட்​பாளர்​கள் மற்​றும் முகவர்​கள் விழிப்​புடன் இருக்க வேண்​டும். ஒவ்​வொரு சுற்று முடி​விலும் பதி​வாகும் வாக்​கு​களைச் சரி​யாகச் சரி​பார்க்க வேண்​டும். அதி​காரப்​பூர்வ அறி​விப்பு வரும் வரை கவனக்​குறை​வாக இருக்​கக் கூடாது.

No comments: