News Just In

4/18/2026 06:35:00 PM

நாய்களுக்காகப் பேசிய பெண்ணை விளக்குமாற்றால் தாக்கிய நபர்-காணொளி வெளியாகியதில் நடந்த அதிரடி

நாய்களுக்காகப் பேசிய பெண்ணை விளக்குமாற்றால் தாக்கிய நபர்-காணொளி வெளியாகியதில் நடந்த அதிரடி




மொரகஹேனா பகுதியில் ஒரு பெண்ணை விளக்குமாற்றால் கொடூரமாகத் தாக்கப்படும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியதை தொடர்ந்து , போலிசார் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தின் போது பட்டாசு சத்தம் தனது வீட்டு நாய்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை நிறுத்துமாறு கோரிய அயல் வீட்டுப் பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் அந்தக் காணொளி பரவியதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர், தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.

வெல்மில்லாவைச் சேர்ந்த 54 வயதான நபரே குறித்த சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஹொரானா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments: