
திருகோணமலை சிவன் கோவிலுக்கு அருகாமையில், இன்றைய தினம் (21) பிற்பகல் 3.30 மணியளவில் 'PTA ஐ நீக்கு! PSTA ஐ நிறுத்து' என்ற கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்து பிரசாரம் நடைபெற்றது.
இந்த கையெழுத்து பிரசாரத்தில் திருகோணமலையைச் சேர்ந்த பொதுமக்களும், பல்வேறு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்டனர்.
மேலும், இதே கோரிக்கையை முன்னிறுத்தி நாளைய தினமும் (22) பிற்பகல் 3.30 மணியளவில் திருகோணமலை சிவன் கோவிலுக்கு அருகாமையில் கையெழுத்து பிரசாரம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

No comments: