
78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் தற்போது சுதந்திர சதுக்கத்தில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகி உள்ளது.
“இலங்கையை கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப்பொருளில் 78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர தின கொண்டாட்டங்களின் நேரடி ஒளிபரப்பு இன்று காலை 7.45 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது.
தற்போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்கள் வருகை தந்த வண்ணமுள்ளனர்.
அத்துடன் ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்ட பல நாடுகளின் ராஜதந்திரிகள் மற்றும் உள்நாட்டு பிரமுகர்கள் சுதந்திர சதுக்கத்திற்கு வருகை தந்துள்ளனர்.
No comments: