
உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் இந்தியாவின் முதல் தனிப்பட்ட இராணுவ ட்ரோன் தளம் உருவாக்கப்படவுள்ளது.
900 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த தளம், இந்திய இராணுவத்தின் ட்ரோன் நடவடிக்கைகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
பாரம்பரிய விமான தளங்களைப் போல அல்லாமல், இது முழுக்க முழுக்க ட்ரோன்களுக்காகவே வடிவமைக்கப்படுகிறது.
இந்த தளத்தை Border Roads Organisation (BRO) அமைக்கிறது. இதில் இரண்டு பெரிய ஹேங்கார்கள் மற்றும் 2,110 மீட்டர் நீளமான ரன்வே அமைக்கப்படுகிறது.
இது C-130 போன்ற பெரிய போக்குவரத்து விமானங்களையும், Predator, Heron போன்ற நீண்ட தூர ட்ரோன்களையும் இயக்கக்கூடியதாக இருக்கும். முழுமையான கட்டுமானம் 80 முதல் 85 மாதங்களில் நிறைவடையும் என BRO தெரிவித்துள்ளது.
இந்த தளம் செயல்பாட்டிற்கு வந்தவுடன், இந்தியா உலகில் 5-வது நாடாக (அமெரிக்கா, சீனா, இஸ்ரேல், துருக்கி ஆகியவற்றுக்கு அடுத்ததாக) தனிப்பட்ட இராணுவ ட்ரோன் தளத்தை கொண்ட நாடாக மாறும்.
இந்த திட்டத்தின் பின்னணி Operation Sindoor ஆகும். அந்த நடவடிக்கையில் இந்திய இராணுவம் பல்வேறு வகையான ட்ரோன்களை பயன்படுத்தி, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள், சீன தயாரிப்பு விமான எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் நூர் கான் விமான தளத்தை குறிவைத்து 100 சதவீத வெற்றியைப் பெற்றது. இதனால் ட்ரோன்களுக்கு தனிப்பட்ட தளம் அவசியம் என அரசு முடிவு செய்தது.
ட்ரோன் தளம் மூலம் குறைந்த செலவில், குறைந்த பணியாளர்களுடன், 24 மணி நேர கண்காணிப்பு மற்றும் பல்வேறு முனைகளில் ஒரே நேரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளும் திறன் கிடைக்கும். இது இந்தியாவின் பாதுகாப்பு திறனை உலகளவில் உயர்த்தும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.
No comments: