News Just In

2/06/2026 07:47:00 AM

10 லட்சம் லீற்றர் எரிபொருளுடன் ஈரான் சிறைபிடித்த கப்பல்கள்!

10 லட்சம் லீற்றர் எரிபொருளுடன் ஈரான் சிறைபிடித்த கப்பல்கள்


ஈரான் கடற்பரப்பில் சட்டவிரோதமாக எண்ணெய் கடத்த முயன்றதாகக் கூறி, இரண்டு வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களை அந்நாட்டு பாதுகாப்புப் படைகள் தடுத்து வைத்துள்ளன.

ஈரானின் ஃபார்சி தீவுக்கு அருகே, டீசல் உள்ளிட்ட சுமார் 10 லட்சம் லீற்றர் எண்ணெயுடன் பயணித்த அந்த இரண்டு கப்பல்களும், வியாழக்கிழமை (பெப்ரவரி 5) கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்னர் அவை புஷேர் துறைமுக நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த கப்பல்களில் இருந்த 15 பணியாளர்கள் தற்போது சட்ட அமலாக்க அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ஈரானின் புரட்சிகர காவல்படையைச் சேர்ந்த அதிகாரி ஜெனரல் ஹெய்தார் ஹோன்ரியன் மொஜாராட் தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்த எண்ணெய் கப்பல்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவை என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
மேலும், அவை உண்மையில் எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இதற்கு முன், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், 16 பணியாளர்களுடன் பயணித்த ஒரு வெளிநாட்டு எண்ணெய் கப்பலையும் ஈரான் அதிகாரிகள் தடுத்து வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: