News Just In

1/28/2026 11:42:00 AM

அமைதி வழங்கும் அமைப்பாக ஐ.நா. சபையை மக்கள் கருதவில்லை: இந்தியாவின் நிரந்தர தூதர் விமர்சனம்


அமைதி வழங்கும் அமைப்பாக ஐ.நா. சபையை மக்கள் கருதவில்லை: இந்தியாவின் நிரந்தர தூதர் விமர்சனம்



சர்​வ​தேச அமைதி மற்​றும் பாது​காப்பை வழங்​கும் ஓர் அமைப்​பாக ஐ.நா.வை உலக மக்கள் கருது​வ​தில்​லை என்று இந்​தி​யா​வின் நிரந்தர தூதர் பர்​வதனேனி ஹரீஷ் விமர்​சித்​துள்​ளார்.

ஐ.நா.​வில் இருந்து வில​கு​வ​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த வாரம் அறி​வித்​தார். அத்​துடன், ஐ.நா.வுக்கு மாற்​றாக, ‘போர்டு ஆப் பீஸ்’ என்ற அமைப்பை தொடங்​கி​னார். இதில் உறுப்​பின​ராக இந்​தியா உட்பட உலக நாடு​களுக்கு அழைப்பு விடுத்​தார். அதிபர் ட்ரம்ப்​பின் தலை​மை​யில் இயங்​கும் இந்த அமைப்​பில், அர்​ஜென்​டி​னா, அர்​மீனி​யா, அஜர்​பைஜான், பஹ்ரைன், பல்​கேரி​யா, ஹங்​கேரி, இந்​தோ​னேசி​யா, ஜோர்​டான், கஜகஸ்​தான், கொசாவோ, மங்​கோலி​யா, மொராக்​கோ, பாகிஸ்​தான், பராகு​வே, கத்​தார், சவு​தி, துருக்​கி, ஐக்​கிய அரபு எமிரேட், உஸ்​பெகிஸ்​தான் ஆகிய நாடு​கள் சேர்ந்​துள்​ளன. ஆனால், இந்​தியா மற்​றும் பல ஐரோப்​பிய நாடு​கள் அதில் சேர​வில்​லை.

இந்​நிலை​யில், ஐ.நா.​வின் செயல்​பாடு​கள் குறித்து அந்த அமைப்​பின் இந்​தி​யா​வுக்​கான நிரந்தர தூதர் பர்​வதனேனி ஹரீஷ் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தற்​போது சர்​வ​தேச அளவில் ஏற்​பட்​டுள்ள புவி அரசி​யல் சவால்​களில் துணிச்​சலான நடவடிக்கை எடுக்​கும் அளவுக்கு ஐ.நா. செயல்​பட​வில்​லை.

அதற்கு நிக​ராக பிற விவாதங்​களும், நடவடிக்​கைகளும் வேறு சில​ரால் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. இந்த சூழ்​நிலை​யில், உலக நாடு​களிடம் அமை​தி, பாது​காப்​புக்கு ஏற்ற அமைப்​பாக ஐ.நா.வை உலக மக்​கள் கருத​வில்​லை. சர்​வ​தேச சட்​ட​திட்​டங்​களை அனை​வரும் மதித்து நடக்க வேண்​டும். இதில் எந்த நாடும் இரட்டை வேடம் போடக் கூடாது.

அதே​நேரம் சர்​வ​தேச சட்​ட​திட்​டங்​கள் என்​பது, ஒரு நாட்​டின் இறை​யாண்​மையை தாக்​கு​வதற்​கோ, உள்​நாட்​டின் பிரச்​சினை​களில் தலை​யிடு​வதற்கோ அனு​ம​திக்க கூடாது. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

No comments: