News Just In

11/18/2025 07:38:00 AM

ஆபரேஷன் சிந்தூர் வெறும் முன்னோட்டம்தான்: ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

ஆபரேஷன் சிந்தூர் வெறும் முன்னோட்டம்தான்: ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை



டெல்​லி​யில் கார் குண்​டு​வெடிப்பு தாக்​குதல் நடந்த நிலை​யில், ஆபரேஷன் சிந்​தூர் வெறும் முன்​னோட்​டம்​தான் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்​தானுக்கு எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

கடந்த 10-ம் தேதி டெல்லி செங்​கோட்டை அருகே கார் குண்டு வெடித்​த​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலின் பின்​னணி​யில் பாகிஸ்​தானைச் சேர்ந்த ஜெய்​ஷ்-இ-​முகமது தீவிர​வாத அமைப்பு இருப்​பது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

குறிப்​பாக டாக்​டர்​களை மூளைச் சலவை செய்து இந்த சதித் திட்​டத்தை தீட்​டி​யிருப்​பதும் தெரிய​வந்​துள்​ளது. எனினும், முன்​கூட்​டியே சோதனை நடத்​தப்​பட்டு பலர் கைது செய்​யப்​பட்​ட​தால் பெரிய அளவி​லான தாக்​குதல் முறியடிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற ஒரு நிகழ்ச்​சி​யில் ராணுவ தளபதி ஜெனரல் உபேந்​திர திவேதி பேசி​ய​தாவது:

ஒரு நாட்​டின் அரசு தீவிர​வாதத்தை ஊக்​கு​வித்​தால் அது இந்​தி​யா​வுக்கு கவலை அளிக்​கும் விஷய​மாக மாறும். வளர்ச்​சி​யடைந்த இந்​தியா இலக்கை நோக்கி நாம் சென்று கொண்​டிருக்​கிறோம். இதில் யாராவது தடைகளை ஏற்​படுத்​தி​னால் அவர்​களுக்கு எதி​ராக சில நடவடிக்​கைகளை எடுக்க வேண்டி இருக்​கும்.

இயல்​புநிலை பற்றி பேசும்​போது, தீவிர​வாத​மும் பேச்​சு​வார்த்​தை​யும் ஒன்​றாக செல்ல முடி​யாது. அமை​தி​யான செயல்​முறையை ஏற்​றுக் கொள்​ளுங்​கள் என்று நாங்​கள் சொல்​கிறோம். அதற்கு நாங்​கள் ஒத்​துழைப்​போம். அது​வரை தீவிர​வா​தி​களை​யும் அவர்​களின் ஆதர​வாளர்​களை​யும் ஒரே மாதிரி​யாகத்​தான் நடத்​து​வோம்.

தீவிர​வா​தி​களை ஊக்​கு​விப்​போருக்கு நாங்​கள் பதிலடி கொடுப்​போம். இன்று இந்​தியா எந்த ஒரு மிரட்​டலுக்​கும் பயப்​ப​டாத நிலை​யில் உள்​ளது. ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை வெறும் முன்​னோட்​டம்​தான். அது 88 மணி நேரத்​தில் முடிந்​து​விட்​டது. எதிர்​காலத்​தில் எந்த சூழ்​நிலைக்​கும் நாங்​கள் தயா​ராக இருக்​கிறோம். பாகிஸ்​தான் ஒரு வாய்ப்பு கொடுத்​தால், பக்​கத்து நாட்​டிடம் எவ்​வாறு பொறுப்​புடன் நடந்து கொள்ள வேண்​டும் என்​பதை கற்​றுக் கொடுக்க தயா​ராக இருக்​கிறோம். இவ்​வாறு உபேந்திர திவேதி தெரி​வித்​தார்

No comments: