News Just In

11/13/2025 06:11:00 AM

அரசு மருத்துவப் பணியில் இருந்து 2013 முதல் தலைமறைவான ஷாகின்: சகோதரர் டாக்டர் பர்வேஸ் அன்சாரியிடம் விசாரணை

அரசு மருத்துவப் பணியில் இருந்து 2013 முதல் தலைமறைவான ஷாகின்: சகோதரர் டாக்டர் பர்வேஸ் அன்சாரியிடம் விசாரணை




 உ.பி. லக்​னோவைச் சேர்ந்த டாக்​டர் ஷாகின், கான்​பூரில் உள்ள கணேஷ் சங்​கர் வித்​தி​யார்த்தி மருத்​து​வக் கல்​லூரி​யில் (ஜிஎஸ்​விஎம்​சி) 7 ஆண்டு விரிவுரை​யாள​ராகப் பணி​யாற்றி உள்​ளார். கடந்த 2013-ம் ஆண்​டில் அவர் நிர்​வாகத்​துக்கு எந்த தகவலும் கூறாமல் காணா​மல் போய் உள்​ளார். இதையடுத்து 2021-ல் ஷாகின் பணி நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

கான்​பூரின் பிரபல ஜிஎஸ்​விஎம்​சி.​யின் தகவல்​களின்​படி, டாக்​டர் ஷாகின் ஜனவரி 1999-ல் பிர​யாக்​ராஜ் அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் எம்​பிபிஎஸ் பட்​டம், டிசம்​பர் 2003-ல் மருந்​தி​யலில் முதுகலைப் பட்​டம் பெற்​றுள்​ளார். பின்​னர் யுபிஎஸ்சி மூலம் அரசு மருத்​து​வ​ராகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். ஆகஸ்ட் 2006-ல், அவர் ஜிஎஸ்​விஎம்சி மருந்​தி​யல் துறை​யில் விரிவுரை​யாள​ராக சேர்ந்​தார். 2009-10-ம் ஆண்​டில், ஷாதின் கன்​னோஜ் மருத்​து​வக் கல்​லூரிக்கு மாற்​றப்​பட்​டார்.

எனினும், 6 மாதங்​களுக்​குப் பிறகு மீண்​டும் ஜிஎஸ்​விஎம்சி கல்​லூரிக்கே திரும்​பி​னார். பணி நீக்​கத்​துக்கு பிறகு, கல்​லூரி​யில் அனுபவச் சான்​றிதழ் கோரி சகோ​தரரின் லக்னோ முகவரி​யில் இருந்து ஷாகின் விண்​ணப்​பித்​துள்​ளார். இதற்​கிடை​யில், மகா​ராஷ்டி​ராவைச் சேர்ந்த கண் மருத்​து​வர் டாக்​டர் ஹயாத் ஜாபர் என்​பவரை திரு​மணம் செய்த அவர், 2013-ல் விவாகரத்து செய்​துள்​ளார்.

இதுகுறித்து டாக்​டர் ஜாபர் ஹயாத் கூறும்​போது, ‘‘பெரியோர்​களாகப் பார்த்து செய்து வைத்த எங்​களது திரு​மணம் 2013-ல் முறிந்​தது. அப்​போது முதல் நான் ஷாகினின் தொடர்​பில் இல்​லை. அவர் எனது விருப்​பத்​துக்கு மாறாக, இரு​வரும் ஐரோப்​பிய நாடு​களில் பணி​யாற்​றலாம் என விரும்​பிய​தால் விவாகரத்​தானது. அவர் கைவிட்ட 2 குழந்​தைகளும் என்​னுடன் வளர்​கின்​றனர்’’ என்​றார்.

விவாகரத்​துக்கு பின் பரிதா​பாத்​தில் டாக்​டர் ஷாகின், சில ஆண்​டு​கள் பணி​யாற்றி உள்​ளார். அப்​போது​தான் அவர் ஜெய்ஷ் இ முகமது தீவிர​வாத அமைப்​பிடம் சிக்​கி​யுள்​ளார். அவர் ஜெய்​ஷின் பெண்​கள் பிரி​வான ‘ஜமாத் உல் மோமி​னாத்​’​தின் இந்​திய தலை​வ​ராகி உள்​ளார். இதனால், பரிதா​பாத் பணி​யில் ஷாகினுடன் அப்​போது தொடர்​பில் இருந்​தவர்​களை​யும் டெல்லி புல​னாய்வு அமைப்​பு​கள் விசா​ரித்து வரு​கின்​றன.

உ.பி.யின் சஹாரன்​பூரில் பணிபுரிந்த டாக்​டர் ஆதில் கடந்த நவம்​பர் 6-ம் தேதி ஜம்மு காஷ்மீர் போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்​டார். ஆதில் அளித்த தகவல்​களின்​ அடிப்​படை​யில்​ டாக்​டர்​ ஷாகின்​ கைதாகி இருந்​தார்​.

சஹாரன்​பூரில் டாக்​டர் ஷாகின் சகோ​தரர் டாக்​டர் பர்​வேஸ் அன்​சா​ரி​யும் ஒரு மருத்​து​வ​மனை நடத்தி உள்​ளார். பிறகு லக்​னோ​வின் தனி​யார் பல்​கலைக்​கழகத்​தில் பணி செய்து வந்​துள்​ளார். பர்​வேஸும் தீவிர​வாத மருத்​து​வர்​கள் குழு​வின் உறுப்​பின​ராக இருக்​கலாம் என சந்​தேகிக்​கப்​படு​கிறது. இவரிடம் உ.பி. தீவிர​வாதத் தடுப்பு படை​யினர் தீவிர விசா​ரணை நடத்​துகின்​றனர்.


No comments: