News Just In

9/03/2025 08:10:00 PM

திருமணத்தில் ஒன்றுகூடிய மஹிந்த, மைத்திரி; வைரலாகும் புகைப்படங்கள்


திருமணத்தில் ஒன்றுகூடிய மஹிந்த, மைத்திரி; வைரலாகும் புகைப்படங்கள்



இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பல சிரேஷ்ட அரசியல்வாதிகள் அண்மையில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்

ழும்பில் உள்ள ஷங்ரி-லா விருந்தகத்தில் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவவின் மகளினது திருமணத்தின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சித் தவிசாளர் வஜிர அபேவர்தன, முன்னாள் அமைச்சர்களான அலி சப்ரி, டளஸ் அழகப்பெரும, விஜயதாச ராஜபக்ஷ, சாகல ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் பல அரசியல்வாதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தற்போதைய அரசியல் நிலைமை குறித்து இந்த அரசியல்வாதிகளிடையே ஒரு கலந்துரையாடலும் நடந்துள்ளதாக அரசியல் உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

No comments: