சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டிகளுக்கு தகுதி
நூருல் ஹுதா உமர்
2025 ஆம் ஆண்டுக்கான வலய மட்ட விளையாட்டுப் போட்டியில் கடந்த வருடத்தை போன்று இவ் வருடமும் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய மாணவர்கள் 10 வெற்றிகளை தனதாக்கி மாகாண மட்ட போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதில் 02 முதலாமிடங்கள், 05 இரண்டாமிடங்கள், 03 மூன்றாமிடங்கள் அடங்குகிறது. வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கும் இவ் வெற்றிக்காக உழைத்த பாடசாலையின் விளையாட்டுப் பொறுப்பாசிரியர் எம்.எப்.எம். றிபாஸ், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் என்.எம்.ஏ. ஆபாக், இணைப்பாடவிதான பொறுப்பதிபர் எம்.எப்.எம்.ஆர். ஹாத்தீம், பிரதி அதிபர் எஸ்.எம். சுஜான், ஏனைய பங்களிப்பு வழங்கிய ஆசிரியர்கள் அனைவருக்கும் பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் அவர்கள் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
6/24/2025 10:00:00 AM
சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டிகளுக்கு தகுதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments: