News Just In

8/15/2024 10:17:00 AM

நற்பிட்டிமுனை நூலகத்தில் வாசகர் வட்டம் அமைக்கும் நிகழ்வு!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

நற்பிட்டிமுனை பொது நூலகத்தில் வாசகர் வட்டம் அமைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மாவட்ட சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம். சாஹீர் அவர்களின் முன்னிலையில் நூலகர் எஸ்.எம்.ஆர். அமினுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்திகழ்வில் வாசகர் வட்டத்திற்கான நிர்வாகிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன்போது நூலகத்தை அழகுபடுத்தும் திட்டத்திற்காக நலன் விரும்பிகளால் ஒரு தொகை பூச்சாடிகளும் கையளிக்கப்பட்டன

No comments: