News Just In

7/05/2024 02:09:00 PM

கைலாசா நாடு எங்கிருக்கிறது? அறிவிக்கபோகும் நித்யானந்தா!




கைலாசா நாடு எங்கிருக்கிறது என ஜூலை 21 ஆம் திகதி குரு பூர்ணிமா அன்று அறிவிக்கப்படும் என சர்ச்சை சாமியார் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழக சாமியார் நித்யானந்தா மீது பாலியல், ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த நித்தியானந்தா, கடந்த 2019 ஆம் ஆண்டு தலைமறைவானார்.

கைலாசா என்னும் தீவுக்கு சென்றுவிட்டதாகவும், இந்துக்களுக்கான நாடாக உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். தங்களுக்கென தனியாக அரசு, தனிக் கொடி, பாஸ்போர்ட், நாணயம் உள்ளதாகவும், தன்னை அந்நாட்டின் அதிபராகவும் நித்தியானந்தா கூறிக்கொண்டார்.

எனினும் கைலாசா நாடு எங்கு இருக்கிறது என்பது இன்னும் ரகசியமாக இருக்கிறது. அங்கிருந்து அவ்வபோது வீடியோ மூலம் சொற்பொழிவும் ஆற்றி, அதனை தனது பிரத்யேக யுடியூப் சேனலில் பதிவேற்றி வந்தார்.

இந்நிலையில் கைலாசா இருக்கும் இடத்தை வரும் ஜூலை 21ம் திகதி அறிவிக்க போவதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நித்தியானத்தாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

No comments: