எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான தீர்மானங்கள் இன்று இரவு இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் எரிபொருள் சூத்திரத்தின் அடிப்படையில் மாதாந்த எரிபொருள் திருத்தம் இடம்பெறும் எனவும் அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சரியான முறையைப் பின்பற்றாத காரணத்தினால் நாளை 5 வீதத்தால் பேருந்து கட்டணத்தை குறைக்கமுடியாதென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
No comments: