News Just In

5/15/2024 01:16:00 PM

தமிழின அழிப்பை நினைவுகூர உணர்வுபூர்வமாக தயாராகும் தாயகம் : முல்லைத்தீவு நகரை நோட்டமிட்ட உலங்கு வானூர்தி!



மே மாதம் ஆரம்பித்த வேளை முல்லைத்தீவுநகரை சுற்றி உலங்கு வானூர்தி மூலம் இலங்கை விமான படையினர் கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் தமிழின அழிப்பு நாளான மே மாதம் 18 ஆம் திகதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மக்களை மக்கள் நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு வருடமும் இராணுவம், பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமானதாகும்.

இந்நிலையில், இவ்வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் தற்போது ஆரம்பமாகியிருக்கும் நிலையில் முல்லைத்தீவு பகுதியில் என்றும் இல்லாதவாறு கடந்த இரு தினங்களாக உலங்கு வானூர்தி வானை சுற்றி நோட்டமிட்ட வண்ணம் உள்ளதாக அப்பகுதியில் இருந்து  வரும்   செய்திகள் தெரிவிக்கின்றன  

ஆகவே இவ்வருடமும் அஞ்சலி நிகழ்வு கெடுபிடிகளுக்குள் தானா? என்ற ஐயமும் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

ஏற்கனவே, தமிழர் தாயக பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்ற நிலையில், அதற்கும் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினர்பல்வேறுஇடையூறுகளைஏற்படுத்திவருகின்றமைகுறிப்பிடத்தக்கது.

No comments: