News Just In

5/03/2024 10:50:00 AM

நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி அதிகார சபையில் நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு.!


(எஸ்.அஷ்ரப்கான்)
அம்பாறை மாவட்ட செயலகத்தின் நு கர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி அதிகார சபையில் பயிற்சி நெறியினை மேற்கொள்ளும் பயிலுனர்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ்.அப்துல் நாஸர் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

இதன் போது, பாவனையாளர் உரிமைகள்,பொறுப்புகள்,சட்டங்கள், பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் முறைப்பாடு செய்வது சம்மந்தமாக பயிலுனர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இவ் விழிப்புணர்வு நிகழ்சிக்கு பிரதான வளவாளராக அம்பாறை மாவட்ட நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரி இஷட்.எம். ஸாஜீத் மற்றும், என்.எம். நூஸ்கி ஆகியோருடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.

No comments: