News Just In

3/08/2024 11:08:00 AM

விஞ்ஞான ஆய்வுகூட திறப்பு விழாவும் கண்காட்சியும்.!



(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை அல் - மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வுகூட திறப்பு விழா மற்றும் கண்காட்சி நிகழ்வுகள்
அதிபர் எம்.ஐ.அப்துல் றசாக் தலைமையில், பிரதி அதிபர் எம்.ஆர்.முஹம்மது நௌசாதின் நெறிப்படுத்தலில் பாடசாலையில் 2024.03.06ம் திகதி இடம்பெற்றது.

மாணவர்களின் ஆக்கங்களைக் கொண்டு ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் இவ் விஞ்ஞான ஆய்வுகூடம் ஒழுங்கமைக் கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதுடன் தொடர்ச்சியாக இரு நாட்கள் கண்காட்சி நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் எச்.எம்.றஸீன் முஹம்மட், கௌரவ அதிதிகளாக கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்வி பணிப்பாளர் எம்.எச்.றியாஸா, கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் எம்.எஸ். ஸஹ்துல் அமீன் ஆகியோரும், விசேட அதிதிகளாகபிரதி அதிபர் எம்.வை.எம்.ஸாதீக், உதவி அதிபர்களான எம்.எஸ்.நிஹால் முஹம்மட், இஸட் ரீ.ஸியாம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இங்கு மாணவர்களால் பரிசோதனைகள் செய்து காட்டப்பட்டு விளக்கங்களும் வழங்கப்பட்டது.

No comments: