News Just In

3/23/2024 06:04:00 PM

உலக வாய் சுகாதார தினத்தையொட்டி கண்ணகிபுரத்தில் பற்சிகிச்சை முகாம்!



நூருல் ஹுதா உமர்
உலக வாய் சுகாதார தினத்தையொட்டி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய வாய் சுகாதார பிரிவு ஏற்பாடு செய்த பற்சிகிச்சை முகாம் அக்கரைப்பற்று, கண்ணகிபுரம் கண்ணகி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

"மகிழ்ச்சியான வாய் ஆரோக்கியமான உடல்" எனும் தொனிப்பொருளில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.பபாகரன், கல்முனை பிராந்திய தாய்சேய் நலன்பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்பின், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி பீ.அகிலன், பிராந்திய வாய் சுகாதார பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.சரூக், கண்ணகி மகா வித்தியாலய அதிபர் ரீ.ராசநாதன் மற்றும் பல் மருத்துவர்கள், சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் வாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கும் இடம்பெற்றது. பிராந்திய வாய் சுகாதார பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.சரூக், டொக்டர் ஹபீல் ஆகியோர் இக்கருத்தரங்கில் விரிவுரையாற்றினர்.

ஒவ்வொரு வருடமும் மார்ச் 20 ஆம் திகதி உலக வாய் சுகாதார தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையொட்டி கல்முனை பிராந்திய வாய் சுகாதார பிரிவு மருத்துவ முகாம், விழிப்புணர்வுக் கருத்தரங்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது.

ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரியின் பூரண ஒத்துழைப்புடன் குறித்த பற்சிகிச்சை முகாம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

No comments: