News Just In

3/06/2024 06:39:00 AM

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!




வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான புதிய யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த (08.08.2022) ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம், முறையான வங்கி முறைகள் மூலம் இலங்கையில் உள்ள உரிமம் பெற்ற வங்கிகளுக்கு வெளிநாட்டுப் பணம் அனுப்பும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்தை (30.06.2024) ஆம் திகதி வரை நீடிப்பதற்கு கடந்த (08.01.2024) ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, 1969 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கும் வகையில் ஜனாதிபதி இந்த முன்மொழிவை சமர்ப்பித்திருந்தார்

No comments: