News Just In

2/22/2024 06:50:00 AM

வானிலை தொடர்பான முன்னறிவித்தல்!




தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் இன்று (22) சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இது தவிர, நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலையே காணப்படக்கூடும்.

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது

No comments: