கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த சில விமானங்களின் பயணங்கள் இன்று (27) இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு புறப்படவிருந்த 7 விமானங்களே இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சேவைகள் இரத்துச் செய்யப்பட்ட விமானங்களில் 6 விமானங்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானவை.
No comments: