அரச தாதியர் சங்கம் இன்று புதன்கிழமை (17) காலை 7.00 மணி முதல் நாளை வியாழக்கிழமை காலை 7.00 மணி வரை நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளது.
பல சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்றைய தினம் காலை 6.30 மணியளவில் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அரச தாதியர் சங்கம் இன்று பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துக்கது.
சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரணவுக்கும் நிதி இராஜாங்க செகான் சேமசிங்கவுக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்ற கலந்துரையாடலில் எதிர்பார்த்த தீர்வு கிடைக்காத காரணத்தினால் இன்றையதினம் அரச தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுதத் ஜயசிறி தெரிவித்தார்.
இதேவேளை, ஒரு வாரத்திற்குள் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிடின் தொழிற்சங்க நடவடிக்கை மீண்டும் முன்னெடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
No comments: