News Just In

6/21/2023 04:03:00 PM

குருந்தூர் மலை விவகாரம்: பௌத்த மயமாக்கல் முயற்சி அம்பலம்!

பௌத்த மயமாக்கல் முயற்சி அம்பலம்!


முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் பௌத்த மயமாக்கல் முயற்சி அம்பலமாகியுள்ளது.

மேலும் குருந்தூர் மலை பிரதேசத்தில், நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விகாரையில் இராணுவத்தினர் தொடர்ந்து நிலைகொண்டுள்ளனர்.

இந்த நிலையில், இராணுவத்தினரின் பங்களிப்புடனேயே குருந்தூர் மலையில் விகாரையின் பணிகள் இடம்பெற்றது என்பதை அங்கு புதிதாக பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேசமயத்தில், இங்கு வருகை தருபவர்களின் வாகனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதன்மூலம், மீண்டும் குருந்தூர் மலையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட பௌத்த மயமாக்கல் முயற்சி அம்பலமாகியுள்ளது.


No comments: