News Just In

6/13/2023 06:18:00 AM

நரேந்திர மோடியை சந்திக்க இந்தியா பயணமாகும் ரணில் மற்றும் ஜீவன் தொண்டமான்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் (21.07.2023)ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதியுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் இந்தியா செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கைக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, பாதுகாப்பு, கலை மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்தியப் பிரதமருடனான சந்திப்பின் போது' மலையகம் – 200' தொடர்பிலும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள 'மலையகம் – 200' நிகழ்வுக்கு இந்தியப் பிரதிநிதிகளை அழைப்பதற்கான கோரிக்கையும் இதன்போது விடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments: