News Just In

5/08/2023 05:19:00 PM

மட்டு. கொக்குவிலில் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இருந்து 2 சிறுமிகள் தப்பி ஓட்டம் !




மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு சீர்திருத்த நிலையம் ஒன்றில் இருந்து 14,13 வயதுடைய இரு சிறுமிகள் இன்று (திங்கட்கிழமை) தப்பி ஓடியுள்ளனர்.

மாவட்டத்தில் சிறுவர் திருமணம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவர்கள் குறித்த பராமரிப்பு நிலையங்களுக்கு நீதிமன்றத்தினால் அனுப்பப்படுகின்றனர்.

இந்நிலையில் நீதிமன்றினால் குறித்து சிறுவர் பராமரிப்புக்காக அனுப்பப்பட்ட வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியும் ஏறாவூரைச் சேர்ந்த 13 வயது சிறுமியும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பாராமரிப்பு நிலையத்தினர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments: