News Just In

4/06/2023 07:40:00 AM

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்தத்திற்குத் தட்டுப்பாடு விரைந்து உதவுமாறு இரத்த வங்கி வேண்டுகோள்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்தத்திற்குத் தட்டுப்பாடு நிலவுவதால் குருதிக் கொடையாளிகள் விரைந்து வந்து இரத்த தானம் செய்யுமாறு அவ்வைத்தியாலை இரத்த வங்கிப் பிரிவின் வைத்திய அதிகாரி கீர்த்திகா மதனழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை 04.04.2023 இரவு இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அவ்வேண்டுகோளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் எல்லா வகையான இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, உயிர் காக்கும் உன்ன சேவையினை மேற்கொள்ள குருதிக் கொடையாளர்களின் மகத்தான கொடை தேவைப்படுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இரத்த தானம் செய்ய உத்தேசித்துள்ளவர்கள் உடனடியாக வந்து உதவுமாறு அந்த வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.எச்.ஹுஸைன்

No comments: