News Just In

4/16/2023 08:41:00 AM

கடவுளை காண்பதற்காக காட்டில் உண்ணாவிரதமிருந்த 15 பேருக்கு நேர்ந்த நிலை!

கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில், கடவுளை காண்பதற்காக நடுக்காட்டில் உண்ணா நோன்பிருந்த 15 பேரை பொலிசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் 4 பேர் உயிரிழந்தனர்.

Good News International Church என்ற பெயரில் அமைப்பு நடத்தி வரும் மகென்சி என்தெங்கே என்பவர் வேறொரு உலகில் உள்ள கடவுளை காண்பதற்கு உணவு, தண்ணீர் கூட அருந்தாமல் காத்திருந்தால் கண்டிப்பாக கடவுளை அடையலாம் என்று பிரச்சாரம் செய்து வந்துள்ளார்.

இதனை உண்மையென நம்பி கிளிஃபி காட்டிற்குள் சென்றிருந்த 15 பேரை பொலிஸார் மீட்ட நிலையில், தலைமறைவான போதகரை தேடி வருகின்றனர்.

அந்த காட்டில் மேலும் பலரின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

No comments: