News Just In

3/01/2023 05:15:00 PM

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா: அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு!



கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபரினால் ,நேற்றைய தினம் (28) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டுக்கான கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா, யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாண ஆயர் இல்லம், இலங்கை கடற்படை,நெடுந்தீவு பிரதேசசெயலகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களின் முழுமையான ஒத்துழைப்புடன் மார்ச் 03 மற்றும் 04 ஆந் திகதிகளில் நடைபெறவுள்ளது

கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு மார்ச் 03 ஆந் திகதிய இரவு உணவு, மார்ச் 04 ஆந் திகதி காலை உணவு மற்றும் மீள் பயணத்தின் போது சிற்றுண்டி என்பன வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: